உணர்வுச்சுவடுகள்…
சுயங்களின் சூனியத்தை
சுட்டெரிக்க விரும்பினேன் !
முடியவில்லை என்னால் !மற்றவர்களுக்காய்…
என் இதழ் விரித்தேன் !
விலகவில்லை…
உன்னில் சிதறிய
என் நினைவுகள் மட்டும்…!கைப்பிடி இதயத்தை
என்னை இம்சிக்காமல்,
இடம் பெயற்றாயடா ???நான் வெற்றி பெரறும்போதெல்லாம்,
நீ பிடித்த கரம் !
தோல்விகளால் துவண்டபோதெல்லாம்,
எனைச் சாய்த்துக்கொண்ட
உன் தோள் !
என் கண்ணீரை
இவ்வுலகம் எட்டிப்பார்க்க விடாத
உன் ஸ்பரிசம் !
உடைந்த போதெல்லாம்
என்னை உதிராமல் காத்த
உன் இதழ் !
வேதனிக்கிறேன் !
எனில் விழும்
சிறு கீரலயும் தாங்கீடாத
உன் மனம்….
எனை மறந்து..
என்னுயிர் கிழிதெரறிந்து…
உணர்வுகளை உரித்தெடுத்து
எனை….
உறைபனியாய் விட்டுச்செல்ல
எப்படி சம்மதித்தது,
உனக்கும் எனக்குமான
நம் உணர்வுச்சுவடுகள்…? ? ?

மறுமொழி இடுக
பின்னூட்டம் இட புகுபதிகை செய்திருக்கவேண்டும்